ஈழத்து கலைஞன் முல்லை ஜேசுதாசன் மாரடைப்பால் உயிரிழப்பு!

  • Post author:
You are currently viewing ஈழத்து கலைஞன் முல்லை ஜேசுதாசன் மாரடைப்பால் உயிரிழப்பு!

ஈழத்து நடிகரும் குறும் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய அபார நடிப்பு திறமைகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி பலராலும் போற்றப்பட்டு வந்தவர் முல்லை ஜேசுதாசன் அவர்கள்.

ஒரு மனிதனாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு வந்தவரும், நடிகரும், குறும் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் இன்று அதிகாலை கள்ளப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ளார்.

ஈழத்து கலைஞன் முல்லை ஜேசுதாசன் மாரடைப்பால் உயிரிழப்பு! 1

17.08.1955 அன்று பிறந்த சந்தியோகு ஜேசுதாசன் அவர்கள் கள்ளப்பாடு தெற்கு முல்லைத்தீவில் வசித்து வந்தார். இன்று காலை அவருடைய 65 ஆவது வயதில் மரணம் அடைந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள