உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை: புடினின் ராஜதந்திரம்!

You are currently viewing உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை: புடினின் ராஜதந்திரம்!

உக்ரைனியர்கள் அனைவருக்கும் ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கையெழுத்திட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் மாஸ்கோவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு முயற்சியாக புடின் இந்த நடவடிக்கையை நேற்று மேற்கொண்டுள்ளார்.

உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷ்யா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் மேற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களை சேர்ந்த மக்களும் ரஷ்ய குடியுரிமையை எளிதில் பெறும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷிய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் லுஹான்ஸ்கில் உக்ரேனிய எதிர்ப்பின் கடைசி பெரிய கோட்டையை ரஷ்யா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments