உழவியந்திரம் ஒன்றின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு!!

You are currently viewing உழவியந்திரம் ஒன்றின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு!!

தென்மராட்சி – கொடிகாமம், பாலாவி காட்டு பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கள்ள மணல் ஏற்றி சென்ற உழவியந்திரம் ஒன்றின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரத்தை நிறுத்த எடுத்த முயற்சி பலனளிக்காமையால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உழவியந்திரத்தின் சக்கரத்தில் சன்னம் துளைத்தமையால் அது காற்றுப் போய் காணப்படுவதாக தெரியவருகிறது. உழவியந்திரத்தில் சென்றவர்கள் அதனை கைவிட்டு சென்றுள்ளதால் அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments