எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்!

  • Post author:
You are currently viewing எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்!

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.  இதேபோன்று ஹூபெய் மாகாணத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.  ஆனால் புதிய பாதிப்பு எதுவும் ஹூபெய் மாகாணத்தில் இல்லை என அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரிகள் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர்.

சீனாவை தவிர்த்து, இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  எனினும், சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வந்தது.

இந்த நிலையில், சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள