எங்கள் வானத்து தினகரன்

You are currently viewing எங்கள் வானத்து தினகரன்

கார்த்திகை திங்கள் மலர்ந்தான்
கங்கை கடாரம் வென்றான்!
அகிலம் ஆகாயம் வரை நிமிர்ந்தான்!
கொண்ட கொள்கையில்
அசையாத மலையாக நின்றான்!
ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை
ஆள வழிசெய்தான்!

இவன் வேதனை விரட்டிய
வேலழகன்!
சாதனை சமைத்த தமிழ்
அரசன்!

மூவேந்தர் வழி வந்து

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

செஞ்சோலையில் சிரிக்கும்
இவன்
செஞ்சோற்றுக்கடன்!
செந்தணலாய் சிவக்கும்
செந்தமிழ் விடுதலை!

விலைக்கு வாங்க முடியா
விடுதலை வீரியனாய்
ஆசியக்கண்டத்தில்
அதிகார வெறிக்கு எதிரான
அணுகுண்டு இவன்!

கார்த்திகை திங்களில்
இவன்
கருத்துக்கள் கண்திறக்கும்!
கலையாத கனவாய்
கனல் தெறிக்கும்!

நாணிக்கோணிய இனத்தின்
கூன் நிமிர்த்திய கொற்றவன்!
முகில் விலக்கி சிரிக்கும்
வானத்து தினகரனின்
வடிவம் இவன்!

மூவேந்தர் வழி வந்து

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

அரிமா அஞ்சும்
உயிர் மெய்
அழகன்!
ஆயுத எழுத்தின்
ஒற்றைத் 
தமிழன்!
அருட்டல் அழித்த
முருகன்!
அருச்சிகனாய்
அவதாரம்
தரித்தவன்!
ஆகாயம் நுழைந்த
ஆகாயகமனம்!
அருணவம் ஆண்ட
சோழன்!
ஆணவம் அறுத்த
ஆணழகன்!
அற்புதங்கள் நிகழ்த்திய
அருட்சோதி!

மூவேந்தர் வழி வந்து

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

பாக்கு நீரிணையில்
கொந்தளித்த
அலையொன்று
வல்வையின் கரையினில்
பொங்கியெழுந்தது!

கார்த்திகை திங்களில்
எறித்த குளிர் நிலவொன்று
தமிழர் அகங்களை
நனைத்தது!

அடிநெஞ்சினில் மிதித்த
வஞ்சகர் வதை கண்டு
வெஞ்சினம் கொண்டது!

மூவேந்தர் வழி வந்து

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

அஞ்சியொடுங்கிய இனத்தில்
முதல் சிறுத்தைப் புலியாகி
பாய்ந்தது!
கொண்ட கொள்கையில் 
ஆலமரமாய் விழுதுகள்
எறிந்தது!

நஞ்சுமாலைக் கழுத்தோடு
பிஞ்சு மனங்களின் பிடிப்போடு
பஞ்சு வெடிப்பின் சிரிப்போடு
நெஞ்சு நிமிர்திய வீரநடையோடு
தலைவா நீ வருகையில்
கொஞ்சமும் பொறுக்கவில்லை


இஞ்சி தின்ற உலகிற்கு
தம்மை விஞ்சியதாய்
அஞ்சியே போயினர்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

தமிழினம் 
சிற்றெறும்பாய் நசுங்கிவிடுமெனும்
அவதூறு விதைத்தவர்
பெரும்வீரன் படைகண்டு
துடை நடுங்கிப் போயினர்!
துணை தேடி துணை தேடி
தூதுவர்களுக்கு
துதிபாடி மகிழ்ந்தனர்!
இறுதியில் 
எம்மின மக்களின்
குருதியில்
நீராடித்திளைத்தனர்!

ஆனாலும்
திறன் கொண்ட பார்வையும்
அறம் கொண்ட வழிநடத்தலும்
நேர் கொண்ட விழியசைவும்
பார் கொண்ட இனத்தில்
வேர் கொண்டு நிற்கிறது!

ஒருகாலம் எமக்காய்
புலரும் பூபாளம்
அதில் ஒளிரும்!
கரிகாலன் மலர்வின்
பலன்தெரியும்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

ஆண்டுக்கொருமுறை

அழகாய் பூக்கும் பூப்போல

உலகமெல்லாம் ஒரு செய்தி

வரும்!

மாண்டுபோன மாவீரர்களின்

எழுகைநாளில் எரியும்

நெருப்பாய் உரிமையின்

குரலாய்

உயிர்க்கும்!

சூரியனை கண்ட தாமரையாய்

சூரிய தேவனைக் கண்டதும்

உயிர்கொண்ட அகிலத்து

அகங்களெல்லாம்

சிலிர்க்கும்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

பிரபாவென்ற பெரும் தமிழைப்

படிப்பதற்காய்

பல்கலைக்கழகங்களே

செய்திப்பக்கங்களை

புரட்டும்!

ஒரு இனத்தின் காப்பாளனாய்

அறத்தின் நெறிபுரளாக் கொள்கையில்

உதிர்க்கும் வார்த்தைகளில்

தமிழினத்தின் விடியும் திசை

வானத்தில்  செங்கதிராய்

சிரிக்கும்!

மூவேந்தர் வழி வந்து

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்

வாழிய வாழிய வல்லமையே வாழிய

வாழிய வாழிய  நற்தலமையை வாழிய

கானகத்தில் கூவும் குயிலாய்

வாழும் காலம் வனப்பழகாய்

தோன்றினாலும்

ஆளும் காலம் முழுதும்

நீளும் வலிகளும் கனக்கும்.

தோன்றும் ஒவ்வொரு ஆண்டும்

காற்றுக்கூட புகமுடியாத

உறுதிப்பாட்டில்

தமிழரின் உரிமையில்

இறுக்கமும்

ஒழுக்கமும்

இருக்கும்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

அதனால்த்தான்

அவனியின் புலனாய்வும்

அண்ணனிடம் தோற்றுப்போகும்!

எத்தனை இரகசியங்கள்

எத்தனை திட்டமிடல்கள்

எத்தனை தேடல்கள்

எத்தனை உற்பத்திகள்

எத்தனை வியூகங்கள்

எத்தனை மதிநுட்பங்கள்

எத்தனை படைக்கட்டுமானங்கள்

எல்லாமே துரிதமாய்

வளர்ந்ததென்றால்

அதற்கு இந்த

வரலாறு தந்த வல்லமையே

எமக்கு வரமாய்

கிடைத்ததுதான்!

புராணங்களில்

புரட்டிய வரலாறுகளின்

கதைகளை

நிதர்சனமாக

கண்முன்னே காட்சிகளாய்

மண்ணிற்காய் போராடிய

மகா தலைவனாய்

எல்லோர்

எண்ணங்களிலும்

எழுச்சியின் தீயினை

பற்றவைத்தவர்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

மாறி மாறி ஆண்ட

அதிகார வர்க்கங்களின்

அரசியல்

அடிவருடிகளாய்

தமிழின விடியலின்

தடைக்கற்களாய்

மடைமாற்றிகளாய்

உருமாறிய

அரசியல் தலைமைகள்

மத்தியில்

ஒரு விடுதலைப்

பேரொளியாக

சிறுவயதிலையே

சீறும் சிறுத்தையாகி

வரலாறின் வழிகாட்டியாகி

வாழ்ந்து காட்டியவர்

எங்கள் தேசியத்தலைவர்

மேதகு பிரபாகரன்!

மூவேந்தர் வழி வந்து

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

முப்பாட்டன் வழி வந்த

முப்படைத்தலைவனாய்

எட்டுத்திக்கும் தமிழ் மனங்களை

தொட்டு நின்ற

கலங்கரை விளக்காய்

உளங்களில் பிரகாசித்து

ஒளிர்ந்தவர்

எங்கள்

ஒப்பற்ற தலைவன்!

முறத்தால் புலியை

விரட்டிய ஆத்தையை

படித்த எமக்கு

புலியாய் மாறிய கோதைகளின்

வீரவரலாற்றை

ஈழவரலாற்றில்

உருவாக்கியவர்

எங்கள் பெரும்

தலைவர் பிரபாகரன்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

கப்பலோட்டிய தமிழன்

கதையை படித்த எமக்கு

கப்பலையே கட்டி

அதற்கு மேலே சென்று

விமானத்தையும் ஓட்டி

வானிலும் கடலிலும்

தமிழனின் படைகளை

எதிரிக்கு எதிரே

நிறுத்திக்காட்டியவர்!

நிறுத்த முடியாத கடிகாரமாய்

களைத்துப்போகாத புலியாய்

உரிமைக்காக உழைத்தது

மட்டுமின்றி

இடைஇடையே

முளைவிடும் துரோகங்களையும்

துடைத்துக்காட்டியவர்!

நேர்மையானவர் மட்டுமே

உரிமைக்காய் உண்மையாய்

உழைக்க முடியும் என்பதில்

அடிக்கடி கற்பித்தும் காட்டியவர்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

வாய்மை தவறிய மனிதர்

நோய் பிடித்த செடியாய்

போவார்

காட்டிக்கொடுதவர்

கானல் நீராய் மறைவார்

என்ற தத்துவத்தை

இற்றைவரையும்

உணர்த்தியே செல்கிறார்

எங்கள் செல்நெறியர்!

நெஞ்சமெல்லாம்
நெடும் தீயாய்
நிறைந்திருக்கும்
தங்கத்தலைவா!


வஞ்சக உலகமும்
உனை வாழ்த்தும் காலம்
வெகுதூரமில்லை!


கஞ்சியும் இல்லாமல்
களத்தில் போராடிய
உங்கள் ஈகத்தின் கொடையை
இதய இடுக்குகளில்
இறுகச்செருகி
இலட்சிய நெருப்பை
அணைய விடாது
அடைகாப்போமென
அகவைநாளில்
உவகையோடு
வாழ்த்துகின்றோம்!

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

✍தூயவன்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments