ஐரோப்பிய ஒன்றிய குழு புறப்பட்டு சென்றது!

You are currently viewing ஐரோப்பிய ஒன்றிய குழு புறப்பட்டு சென்றது!

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று பயணத்தை நிறைவு செய்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு கடந்த 27ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டது.

இந்த நிலையில், நாட்டில் தங்கியிருந்த இந்த பத்து நாட்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பரந்த அளவிலான கூட்டங்களை நடத்தினார்கள்.

மேலும் மனித உரிமை பாதுகாவலர்கள், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினரையும் சந்தித்தனர். இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதர்கள் மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பரிமாறிக் கொண்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதன் திருத்தம் ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்திற்கு இலங்கையை மறுபரிசீலனை செய்வதில் ஒரு முக்கிய அர்ப்பணிப்பு என்பதை இவர்களின் விஜயத்தில் நினைவு கூரப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments