ஒரே நாளில் 242 பேர் பலி ; கொரோனாவின் கோர தாண்டவம்!

  • Post author:
You are currently viewing ஒரே நாளில் 242 பேர் பலி ; கொரோனாவின் கோர தாண்டவம்!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவியது முதல் மிக அதிக எண்ணிக்கையில் கடந்த 10ம் திகதிதான் ஒரேநாளில் 103 பேர் பலியாகியிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கையை காட்டிலும் 2 மடங்கு எண்ணிக்கையில் உயிர் பலி ஒரே நாளில் நேரிட்டுள்ளது.
நேற்று முன்தினம் கொரானா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து விட்டதாக சீனா அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலேயே 242 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து சீனாவில் மட்டும் கொரானா வைரசுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,367ஆக அதிகரித்துள்ளது. இது தவிர்த்து ஹூபே மாகாணத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 2,015 பேருக்கு புதிதாக கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதே சமயம் பிப்ரவரி 12ம் தேதி மட்டும் 14,840 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி வரை உலகளவில் கொரோனா வைரசால் 1,368 பேர் உயிரிழந்துள்ளனர். 60,310 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி, உடனடியாக கட்டுப்படுத்தவில்லையெனில், மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என உலக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள