ஒரே மாதத்தில் 888 டெங்கு நோயாளர்கள்: 80 ஆயிரத்தை கடந்தது இவ்வருட பாதிப்பு! – சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!

You are currently viewing ஒரே மாதத்தில் 888 டெங்கு நோயாளர்கள்: 80 ஆயிரத்தை கடந்தது இவ்வருட பாதிப்பு! – சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 888 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளதாக சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதத்தின், கடந்த சில தினங்களில் மாத்திரம் 184 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 888 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதையடுத்து இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 80,031 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டின் பல மாவட்டங்களில் பதிவாகக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments