ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட் சடலங்களின் எண்ணிக்கை 2018 ஆக உயர்வு!

You are currently viewing ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட் சடலங்களின் எண்ணிக்கை 2018 ஆக உயர்வு!

ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 2018 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழக்கும் சடலங்கள் கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியிலுள்ள சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-22) 47 கொவிட்-19 சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் – 38

இந்துக்கள் – 05

பௌத்தர்கள் – 04

இவ்வாறு நேற்றைய தினம் 47 கொவிட்-19 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 2018 ஆக அதிகரித்துள்ளது.

முஸ்லிம்கள் – 1857 பேரின் சடலங்கள்

இந்துக்கள் – 79 பேரின் சடலங்கள்

பௌத்தர்கள் – 48 பேரின் சடலங்கள்

கிறிஸ்தவர்கள் – 34 பேரின் சடலங்கள்

என தேசிய ரீதியில் மரணித்தவர்களின் 2018 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments