கடல்நீரேரியில் மூழ்கி இளைஞன் பலி!

You are currently viewing கடல்நீரேரியில் மூழ்கி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம்- தொண்டைமானாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று பிற்பகல் 2 மணியளவில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்தவர் ஆவார்.

5 நண்பர்களுடன் தொண்டைமானாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணி நேரமாக நடத்திய தேடுதலை அடுத்து இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த இளைஞனின் சடலத்தை அவரது பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள