கடும் எச்சரிக்கையுடன் சிவாஜிக்கு பிணை!

You are currently viewing கடும் எச்சரிக்கையுடன் சிவாஜிக்கு பிணை!

நீதிமன்ற தடையுத்தரவை  மீறியமை மற்றும்  தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவு கூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று கடுமையாக எச்சரிக்கப்பட்டு ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் காவல்த்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். 

அதனை அறிந்த கோப்பாய் காவல்த்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தை கைது செய்தனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து  நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, நீதி மன்றம் சிவாஜிலிங்கத்தை எச்சரித்து 2 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

பகிர்ந்துகொள்ள