கண்டியில் இருந்து புதுக்குடியிருப்பு வரும் பேருந்தினை நிறுத்த நடவடிக்கை!

You are currently viewing கண்டியில் இருந்து புதுக்குடியிருப்பு வரும் பேருந்தினை நிறுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டியில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தற்போதும் ஒரு அரச பேருந்து தனது சேவையினை வழங்கிவருகின்றது இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவு கூட்டத்தில் இன்று (05.11.2020) அன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டங்கள் பயணிப்பதை கட்டுப்படுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் கண்டியில் உள்ள அரச போக்குவரத்து சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் தரித்து நின்று இரவு கண்டி நோக்கி புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் இரவு வேளைகளில் புதுக்குடியிருப்பினை வந்தடைகின்றது இதில் பயணிப்பவர்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பேருந்தின் ஓட்டுனர்,நடத்துனர்களை தனிமைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து.
முல்லைத்தீவு மாவட்ட அரச போக்குவரத்து சாலை இணைப்பாளருக்கு கண்டியில் இருந்து வரும் குறித்த பேருந்தினை நிறுத்த அறிவுறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள