கனகராயன்குளத்தில் ரயில் பாதையில் ஆணின் சடலம்! – கொலை செய்யப்பட்டாரா?

You are currently viewing கனகராயன்குளத்தில் ரயில் பாதையில் ஆணின் சடலம்! – கொலை செய்யப்பட்டாரா?

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ரயில் மோதி உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றுக் காலை கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது புகையிரதப் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக புகையிரதத் திணைக்களத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட ஆண் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதால் மரணமடைந்ததாரா? அல்லது ஏற்கனவே தாக்கப்பட்டு புகையிரதப் பாதையில் போடப்பட்டுள்ளரா என்ற அடிப்படையில் கனரகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலம் சேட் இன்றி கறுப்பு காற்சட்டை அணிந்தவாறு காணப்படுவதுடன், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் சிறீலங்கா காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments