கனடாவில் ஒரு நாளில் 123 பேர் பலி! – கியூபெக்கில் மட்டும் 75 பேர்!

You are currently viewing கனடாவில் ஒரு நாளில் 123 பேர் பலி! – கியூபெக்கில் மட்டும் 75 பேர்!

கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவில் இதுவரை 27,046 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும், 1,383 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கியூபெக்கில் நேற்று மட்டும், 75 பேர் கொரோனாவுக்கு மரணமாகினர். இங்கு 14,248 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள