கரைவலையில் சிக்கிய T56!

You are currently viewing கரைவலையில் சிக்கிய T56!

மட்டக்களப்பு காத்தான்குடி காவல் பிரிவுவிற்குட்பட்ட கல்லடி திருச்செந்தூர் பகுதியில் மீனவர்கள் கரைவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வலை கரைக்கு வந்ததும் மீன்களுடன் துப்பாக்கியொன்றும் கடலிலிருந்து அகப்பட்டிருப்பதை அவதானித்த மீனவர்கள் சிறீலங்கா காவல்த்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த துப்பாக்கியானது கல்லடி திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் கரை வலையிலேயே அகப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த சிறீலங்கா காவல்த்துறையினர் துப்பாக்கியை மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி T56 ரக துப்பாக்கியென இனங்கண்டுள்ளதுடன், காத்தான்குடி காவல் நிலையத்திற்கு குறித்த துப்பாக்கியினை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், குற்றச்செயல்களுடன் ஈடுபட்ட எவரேனும் கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments