கலிபோர்னியாவில் ஆயுதாரி நடத்திய சரமாரி துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி!

You are currently viewing கலிபோர்னியாவில் ஆயுதாரி நடத்திய சரமாரி துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி!

அமெரிக்கா – கலிபோர்னியா மாகாணத்தில் ரயில் நிலையம் ஒன்றுக்குள் ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

சன் ஜோஸ் நகரில் ரயில்வே அலுவலகத்துக்கு அருகே உள்ள நடைமேடை அமைந்துள்ள பகுதியில் நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தாக்குதலில் ஈடுபட்டவர் இந்த ரயில் நிலையத்தில் பணியாற்றுபவர் என தெரியவருகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் போக்குவரத்து ஊழியர்களும் அடங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொல்லப்பட்டவர் 57 வயதான சாமுவேல் காசிடி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாமுவேல் காசிடி முன்னர் பல தடவைகள் தனது சக ஊழியர்களைச் சுட்டுக்கொல்ல விரும்புவதாக என்னிடம் கூறினார். ஆனால் அவர் அவ்வாறு செய்வார் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை என அவரது முன்னாள் மனைவி சிசிலியா நெல்ம்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொலையாளியான சாமுவேல் காசிடி எப்போதும் தனிமையில் இருப்பார். அவர் ஒரு விசித்திரமான மனிதர் என அவரது பக்கத்து வீட்டுக்காரரான டக் சு கூறியுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுவதற்கு சற்று முன்னர் கொலையாளியான காசிடிக்கு சொந்தமான வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொலையாளியே தனது வீட்டுக்குத் தீவைத்திருக்கலாமா? என ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments