காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தந்தை உயிரிழப்பு !

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தந்தை உயிரிழப்பு !

காணாமல் ஆக்கப்பட்ட  தனது மகனுக்கு நீதிகோரி தொடர்  போராட்டங்களில் பங்கெடுத்துவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் ஓலைதொடுவாய் பகுதியை சேர்ந்த 73  வயது சூசைப்பிள்ளை இராசேந்திரம் ன்பவரே நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட நிலையில் திடீர் மரணமடைந்துள்ளார் .

இவரது மகன் இராசேந்திரம் அன்ரனி ரஞ்சன் 2008 ஆம் ஆண்டு மன்னார் ஓலைதொடுவாய் பகுதியில் விசாரணைக்காக அழைத்த  இலங்கை இராணுவம் அவரை காணாமல் ஆக்கியது. அன்றுமுதல் தனது மகனை தேடி மகனின் மனைவியான தனது மருமகளுடன் இணைந்து தொடர்ந்து நீதிகோரிய போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட இவரது மகனின் மனைவி ஜெயக்குமாரி  வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளராக செயற்ப்பட்டும் வருகின்றார்.

 இதுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட  நீதிகோரிய தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த 56 பேர்  மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள