காணாமல் போனோருக்காக போராட முடியாத நிலையில் தமிழர்கள்: மட்டக்களப்பில் பதட்டம்!

You are currently viewing காணாமல் போனோருக்காக போராட முடியாத நிலையில் தமிழர்கள்: மட்டக்களப்பில் பதட்டம்!

இன்று காலை 8.30 மணியளவில் மாவட்டம் முழுவதும் இருந்து மட்டக்களப்பு நகருக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தடுத்து நிறுத்தி களைந்து செல்லுமாறு பொலிஸாரும் பொதுச் சுகாதார பரிசோதகரும் எச்சரிக்கை செய்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அனுமதி பெற்றே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் 14 நாட்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்திய நிலையில் காணாமல் போன உறவினர்களுக்கும், பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, ஆர்ப்பாட்டகாரர்கள் அந்த இடத்திலிருந்து களைந்து சென்று தந்தை செல்வா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பகிர்ந்துகொள்ள