காபூல் விமான நிலையத்தில் இரட்டைக்குண்டுத்தாக்குதல்; பலர் பலி, படுகாயம்!

You are currently viewing காபூல் விமான நிலையத்தில் இரட்டைக்குண்டுத்தாக்குதல்; பலர் பலி, படுகாயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் – காபூல் விமான நிலையத்தில் நுழைவாயில் அருகே இன்று சற்று முன்னர் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் டசின் கணக்காணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது ஒரு தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதல்தாரிகள் குறித்த தகவல்கள் உத்தியோகபூா்வதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தாக்குதல் இடம்பெற்ற வேளை சுமார் 5,000 ஆப்கானியர்களும், சில அமெரிக்கர்களும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினரும் விமான நிலையத்தில் இருந்தனர்.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதால் காபூல் விமான நிலைய வாயில்களுக்கு வெளியே இருக்கும் அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு வெளியுறவுத்துறை எச்சரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த வெடிப்பு இடபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments