காரைநகரில் பலருக்கு கொரோனாத் தொற்று! ஒரு பகுதியினை முடக்க தீர்மானம்!

You are currently viewing காரைநகரில் பலருக்கு கொரோனாத் தொற்று! ஒரு பகுதியினை முடக்க தீர்மானம்!

பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானித்துள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமதி கோரி கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47 கிராம சேவகர் பிரிவில் சயம்பு வீதி உள்ளடங்கலான ஒரு பகுதியில் அதிக அளவிலான தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதையடுத்து அந்த பகுதியினை முடக்குவதற்கு விண்ணப்பத்தினை சுகாதாரப் பிரிவினரால் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,

குறித்த விண்ணப்பம் அரசாங்க அதிபரினால் சிபார்சு செய்யப்பட்டு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புபட்ட வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இடர்கால நிவாரண உதவியும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments