காவு வண்டி மோதி சிறுவன் பலி!

You are currently viewing காவு வண்டி மோதி சிறுவன் பலி!

 

கிளிநொச்சி பூநகரி செம்மன்குன்று பகுதியில் நேற்று (23) நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

வீதியின் அருகே நின்ற முச்சக்கர வண்டியில் பானை கொள்வனவு செய்துவிட்டு வீதியை குறுக்கறுத்து ஓடிச் சென்ற பொழுது  நோயாளர் காவு வண்டி மோதியதில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் புனகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யோகநாதன் நிலோஜன் என்ற 09 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக  பூநகரி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments