கிணற்றுக்குள் விழுந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

You are currently viewing கிணற்றுக்குள் விழுந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பணம் ஊர்காவற்துறை புளியங்கூடல் தெற்குப் பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். நவரத்தினம் ஜெயசீலன் என்ற 54 வயது குடும்பஸ்தரே கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை சிறுகுற்றத்தடுப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள