கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

  • Post author:
You are currently viewing கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (30) காலை கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! 1

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது.  

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! 2

இதன்போது “பிள்ளைகளை உயிருடன் தந்த போது நீங்கள் தான் பாதுகாப்பு செயலாளர், போரில் இறந்தனர் என்று சொல்லும் நீங்கள் இன்று ஜனாதிபதி” என்ற பதாகையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏந்தியிருந்தனர்.
இதில் பல்வேறு அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி, காக்கா கடை சந்திவரை சென்று மீண்டும் ஏ9 வீதி வழியாக கந்தசாமி கோவிலை வந்தடைந்தது.

இப்போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் செ.கஜேந்திரன், வடக்கு மாசகாண முன்னால் அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஐங்கரநேசன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் பங்கு கொண்டனர்.

பகிர்ந்துகொள்ள