கிளிநொச்சியில் வாள்வெட்டு – 11 பேர் காயம்!!

You are currently viewing கிளிநொச்சியில் வாள்வெட்டு – 11 பேர் காயம்!!

கிளிநொச்சி – உருத்திரபுரம் கூழாவடி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள்வெட்டு மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் 5மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் ஏற்றும் விவகாரமே வாள்வெட்டில் முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஏனைய ஐவரும் சிறிய காயங்களுக்கான சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருப்பதாகவும் தெரியவருகிறது.

கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments