கிளிநொச்சியில்14 பேர் கொண்ட குழுவினர் அட்டகாசம்!

You are currently viewing கிளிநொச்சியில்14 பேர் கொண்ட குழுவினர் அட்டகாசம்!

கிளிநொச்சி – அம்பாள் குளம் பகுதியில் நேற்று மதுபோதையில் சென்ற குழுவினரால் நான்கு பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் குடும்பமொன்றின் வீட்டிற்குள் 14 பேர் கொண்ட குழுவினர் அத்துமீறி நுழைந்து கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 3,12 வயதுடைய குழந்தைகள் மற்றும் அவரது தாய் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments