கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

You are currently viewing கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சிறீலங்கா காவற்துறை நிலையங்களிலும், 16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஒரு குழந்தை கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

07 சிறுவர்கள் அடித்து காயப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று 07 சிறுவர்கள் மீது பாலியல் சேட்டைகள் புரியப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, மாணவர்கள் மத்தியில் வீதி விபத்துகள், போதைப்பொருள் தடுப்பு, சிறு குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டில் 215 வரையான விழிப்புணர்வு செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments