குளவி கொட்டிற்கு இலக்கான கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்!

You are currently viewing குளவி கொட்டிற்கு இலக்கான கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்!

குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகாமம் பகுதியில்மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது குளவி கொட்டிய தன் விளைவாக பலர் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்
இந்நிலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று பேர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய சுமார் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிய வருகின்றது

பகிர்ந்துகொள்ள