கூட்டமாக நிற்பவர்களை குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விரும்பும் ஒஸ்லோ மாநகர நிர்வாகத்தலைவர்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing கூட்டமாக நிற்பவர்களை குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விரும்பும் ஒஸ்லோ மாநகர நிர்வாகத்தலைவர்! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அதிகளவில் கூட்டமாக சேருபவர்களை குறுந்தகவல்கள் (SMS) மூலம் எச்சரிக்கை செய்யும் நவீன முறையை கையாள்வதற்கு ஒஸ்லோ மாநகர நிர்வாகத்தலைவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நகரத்தின் பிரதான இடங்களில் அளவுக்கதிகமான மக்கள் சேரும்போது, அவர்களை கண்காணித்து, இடைவெளிகளை பேணும் விதத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்பட்டாலும், நவீன தொலைத்தொடர்பு முறைகளை கையாண்டு, அதிகமான கூட்டம் உள்ள இடங்களில் நிற்பவர்களை அவர்களின் அலைபேசிகளுக்கு குறுந்தகவல்களை அனுப்புவதன்மூலம் அவர்களை எச்சரித்து கூட்டமாக நிற்பதை தவிர்க்க முடியுமெனவும் மாநகர சபையின் நிர்வாகத்தலைவர் “Raymond Johansan” தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள