கேப்பாபிலவு தனிமைப்படுத்தலில் இருந்த அனைவரும் விடுவிப்பு!

You are currently viewing கேப்பாபிலவு தனிமைப்படுத்தலில் இருந்த அனைவரும் விடுவிப்பு!

கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் இறுதியாக 10 பேருடன் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 257 பேர் கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து கட்டம் கட்டமாக கண்காணிக்கப்பட்டு ஏனையவர்கள் வீடுகளுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
இன்னிலையில் இறுதியாக இருந்த 10 பேர் 27.09.2020 அன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்விவைக்கப்பட்டுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள