கொரோனாவால் பிரான்சில் தமிழர் மரணம்!

You are currently viewing கொரோனாவால் பிரான்சில் தமிழர் மரணம்!

பிரான்ஸில் மானிப்பாய் நபர் கொரோனாவால் உயிரிழப்பு! தாயின் இறுதிக் கிரியைகள் நடைபெற இருந்த வேளையில் குறித்த துயரமும் இடம்பெற்றுள்ளது

பிரான்சில் ஸ்தான் நகரில் வசித்தவரும் யாழ்.மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்தவருமான குடும்பஸ்தர் ஒருவர் கொரோனாவின் பிடியில் சிகிச்சையின் போது கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ஆனந்தா வீதி மானிப்பாயைச் சேர்ந்த அருந்தவம் தயாகரன் (பாபு – வயது 50) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கடந்த 06.04.2021 அன்று குறித்த நபரின் தாயார் அருந்தவம் கருணாதேவி (வயது 79) அவர்கள் பிரான்சில் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியைகள் நடைபெற இருந்தவேளையில் குறித்த துயரமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments