கொரோனாவின் உச்சக் கட்டம் என்னும் வரவில்லை!

You are currently viewing கொரோனாவின் உச்சக் கட்டம் என்னும் வரவில்லை!

பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து போவதால் மேலும் தொற்றுதலின் உச்சக் கட்டம் வரவில்லை என்பதே அர்த்தம் ஆகும்.

25-03-2020 Radio Capital காற்றாலையில் கொடுக்கப்பட்ட பேட்டியில் உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குனர் Ranieri Guerra சில கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.

“இந்த வாரத்தில் ஒரு திருப்புமுனை காணலாம். தொற்றுதலின் உச்சக்கட்டம் இந்த நாட்களில் நடைபெறலாம்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பேட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விமர்சனங்களையும் முன்வைத்தார். “ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமைத் தன்மை இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதைவுக்கு அருகில் சென்று கொண்டு இருக்கின்றோம். மேலும் ஒரு பொதுவான நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம். தொடக்கத்தில் இத்தாலி தனிமைப்படுத்தப்பட்டது” என்ற கடுமையான விமர்சனத்தை Guerra தெரிவித்தார்.

நன்றி-தமிழர் தகவல் மையம்-இத்தாலி

பகிர்ந்துகொள்ள