கொரோனாவுக்கு மட்டக்களப்பில் ஐவர் பலி!யாழ்ப்பாணத்தில் இருவர் பலி!

You are currently viewing கொரோனாவுக்கு மட்டக்களப்பில் ஐவர் பலி!யாழ்ப்பாணத்தில்  இருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கோவிட் தொற்றில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 50ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments