கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தல் நடத்தப்படாது!

You are currently viewing கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தல் நடத்தப்படாது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முற்றாக நீங்கும் வரை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படாது என்று அரசாங்க பேச்சாளர், மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் முதல் வாரத்துக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்வதாக தகவல்கள் பரவியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் அவசரப்படவில்லை என்றும், தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் அதிகாரபூர்வமற்ற வகையில் கூட பேச்சு நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை தேர்தல் நடத்தப்படாது என்றும், அவர் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள