கொரோனா கொடூரம் : மேற்கு நோர்வேயில் கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : மேற்கு நோர்வேயில் கொரோனா மரணங்கள்!

அஸ்கேயில் வசிப்பவர் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 30 திங்கள் அன்று இறந்துள்ளார். இதை நகராட்சி செய்திக்குறிப்பில் உறுதிசெய்துள்ளது.

இறந்தவர் Haukeland பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அங்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு வயதான நோயாளி என்றும், ஒரு வாரத்திற்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து Kleppestø மருத்துவ இல்லத்துக்கு மாற்றப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ இல்லத்தில், இவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிட்சை வழங்கப்பட்டு வந்தார் என்று Askøy நகராட்சி தெரிவித்துள்ளது.

Kleppestø மருத்துவ இல்லத்தில் திங்கள்கிழமை ஒருவர் இறந்தசெய்தி வெளியான சிறிது நேரத்திலேயே, Bergen நகராட்சி,கொரோனா நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்ட ஒரு முதியவர் அதே நாளில் Gullstøltunet மருத்துவ இல்லத்தில் இறந்துள்ளதாக Bergens Tidende செய்தித்தாளுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள