கொரோனா கொடூரம் : நோர்வேயில் ஐந்து புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : நோர்வேயில் ஐந்து புதிய கொரோனா மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸின் விளைவாக நோர்வேயில், மொத்தம் ஐந்து பேர் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் ஒரே மருத்துவ இல்லத்தில் இறந்துள்ளனர்.

திங்கள் காலை, Kristiansand நகராட்சியில் உள்ள Stener Heyerdahl மருத்துவ இல்லத்தில் வசிப்பவர்கள் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக Kristiansand நகராட்சி அறிவித்தது.

நகராட்சி மருத்துவர் Dagfinn Haarr, மேலும் மற்றொரு குடியிருப்பாளரும் ஒரு செவிலியரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுயுள்ளார்.

நகராட்சி மருத்துவர் Dagfinn Haarr இறந்தவர்கள் பற்றிய மேலதிக விபரங்களை கூற விரும்பவில்லை.

மேலும், மற்றொரு நோயாளி Akershus பல்கலைக்கழக மருத்துவமனையின் இறந்துள்ளார். பத்திரிகை அதிகாரி Geir Lindhjem இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது இந்த மருத்துவமனையில் கொரோனா தொடர்பான மூன்றாவது மரணமாகும்..

பகிர்ந்துகொள்ள