கொரோனா கொடூரம் : Drammen நகராட்சியில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : Drammen நகராட்சியில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

Drammen நகராட்சியில் இரண்டு பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதை நகரசபை முதல்வர் Monica Myrvold Berg (Ap) இன்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்ததார்.

“கடந்த 24 மணி நேரத்தில், எங்கள் நகராட்சியில் இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர். நகராட்சியில் பராமரிப்பு இல்லங்களில் வசித்து வந்த இரண்டு முதியவர்கள் இறந்துள்ளனர்” என்று Monica Myrvold Berg (Ap) கூறியுள்ளார்.

Drammen நகராட்சியில் இப்போது ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக இருப்பதாக Berg மேலும் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள