கொரோனா சென்னை : பூரண குணமடைந்த 30 பேர் வீடு திரும்பினர்!

  • Post author:
You are currently viewing கொரோனா சென்னை : பூரண குணமடைந்த 30 பேர் வீடு திரும்பினர்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் பூரண குணமடைந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

“மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலத்த கரவோசை எழுப்பி அவர்களை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்”

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 217 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 95 நபர்களில் 30 பேர் பூரண குணமடைந்தனர்.

இரு மருத்துவ பரிசோதனைகளில் அவர்களுக்கு நோய் பாதிப்பில்லை என்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்

பகிர்ந்துகொள்ள