கொரோனா தாக்கம் : மே 28 வரை துடுப்பாட்ட போட்டிகள் கிடையாது!

  • Post author:
You are currently viewing கொரோனா தாக்கம் : மே 28 வரை துடுப்பாட்ட போட்டிகள் கிடையாது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மே 28-ந் திகதி வரை இங்கிலாந்தில் துடுப்பாட்ட போட்டிகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந் திகதி வரை எந்தவிதமான தொழில்முறை துடுப்பாட்ட போட்டிகளும் நடத்தப்படாது என்று அந்த நாட்டு துடுப்பாட்ட வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் அங்கு உள்நாட்டில் நடக்கும் முதன்மையான துடுப்பாட்ட போட்டியான “கவுண்டி சீசன்” தொடங்குவது குறைந்தது 7 வாரங்கள் தாமதம் ஆகின்றது.

18 முதல்தர கவுண்டி அணிகள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்த பின்பு இங்கிலாந்து துடுப்பாட்ட வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. எனவே ஜூன் 4-ந்தேதி தொடங்க வேண்டிய இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் சுற்று தொடரும் தள்ளிப் போடப்படுகின்றது .

பகிர்ந்துகொள்ள