“கொரோனா” பரிந்துரையை மீறியவருக்கு தண்டனை! நோர்வே காவல்த்துறை நடவடிக்கை!!

You are currently viewing “கொரோனா” பரிந்துரையை மீறியவருக்கு தண்டனை! நோர்வே காவல்த்துறை நடவடிக்கை!!

“கொரோனா” தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் தனிமையில் இருக்கும்படி பரிந்துரைக்கப்பட்ட ஒருவர், பரிந்துரையை மீறியதற்காக 20.000 குரோணர்கள் பணத்தினை தண்டமாக செலுத்தவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

நோர்வேயின் மேற்குப்பகுதியில் வசிக்கும் இளவயதையுடைய ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட பரிந்துரையையும் மீறி, தனிமையில் இருக்கும்படி அறிவுறித்தப்பட்ட ஏனைய இளையோருடன் இணைந்து மகிழ்வாக இருந்தபோதே காவல்துறையால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேற்படி தண்டப்பணத்தை குறிப்பிட்ட நபர் செலுத்த தவறினால், 40 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்கவேண்டி வருமெனவும் காவல்த்துறை எச்சரித்துள்ளது.

“கொரோனா” தொடர்பில் அரசாங்கம் விதந்துரைக்கும் பரிந்துரைகள் கட்டாயமாக பின்பற்றப்படவேண்டுமென நோர்வே காவல்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள