கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக சிறீலங்காவில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண்ணை மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சிறீலங்கா சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

43 வயதையுடைய குறித்த சீனப் பெண், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

சுற்றுலா மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 19 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

குறித்த பெண்ணுடன் இலங்கைக்கு வருகை தந்த ஏனைய சீனப் பிரஜைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள