கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு!

சீனாவிலுள்ள சுகாதார ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.  1,347 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்து உள்ளது.

வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது.  ரெயில்வே நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.  வுகான் நகர குடியிருப்புவாசிகள், வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து வைரஸ் தீவிரமுடன் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

பகிர்ந்துகொள்ள