கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஐவர் கைது!

You are currently viewing கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஐவர் கைது!

யாழ் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்களை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோப்பாய், சுண்ணாகம், மல்லாகம் ஆகிய பகுதிகளில் அண்மையில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றன. திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் நகைகள், பணம், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 5 இளைஞர்களை கோப்பாய் பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள