கொழும்பில் இருந்து வந்த நில அளவை திணைக்களத்தினரால் குருந்தூர் மலை அளவீடு!

You are currently viewing கொழும்பில் இருந்து வந்த நில அளவை திணைக்களத்தினரால் குருந்தூர் மலை அளவீடு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள குமுழமுனை குருந்தூர் மலைப்பகதி கொழும்பில் இருந்து வருகை தந்த நிலஅளவைத் திணைக்களத்தினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக கிராம அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட தொல்பொருள் திணைக்களம் மற்றும் நில அளவைத்திணைக்களத்தின் அனுமதிகள் எதுவும் இன்றி கொழும்பில் இருந்து வருகை தந்த நிலஅளவைத்திணைக்களத்தினரால் கடந்த வாரம் குருந்தூர் மலைப்பகுதி அளவீடு செய்யப்பட்டுள்ளன மாவட்டத்தில் உள்ள எந்த அரச திணைக்களங்களின் அனுமதி இன்றியும் இவ்வறான நடவடிக்கை  ஒன்று இடம் பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாவட்டத்தின் சிரோஸ்ட நிலஅளவை திணைக்கள அதிகாரிகாரியின் அனுமதி இல்லாமல் இவ்வாறு கொழும்பில் இருந்து வருகைதந்த நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் இரண்டு நாட்கள் குறித்த பகுதியில் நில அளவீடுகளை மேற்கொண்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள