கோட்டா அன் கோஇந்திய விமான நிலையத்தில் இறங்குவதற்கு விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது!

You are currently viewing கோட்டா அன் கோஇந்திய விமான நிலையத்தில் இறங்குவதற்கு விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது!

இலங்கை விமானப்படையின் ஏஎன்-32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமான நிலையத்தில் இறங்குவதற்கு விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் உட்பட 15 பேரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்துள்ளன என விமானப்படையின் உயர்மட்ட வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்களசேவைக்கு தெரிவித்துள்ளன.

9ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் அவர் திருகோணமலையிலிருந்து இரத்மலானை விமான நிலையத்திற்கு திங்கட்கிழமை இரண்டு பெல்412 உலங்கு வானுர்திகளில் சென்றார்.

அவர் முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு நேற்று மாலை சென்றார்.

நாட்டின் விமானப்படையின் பிரதிநிதியொருவர் ராஜபக்சவும் அவரது குழுவினரும் ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் யுஎல் 225 விமானம் மூலம் துபாய்க்கு செல்ல திட்டமிட்டிருந்தனர் என உறுதி செய்தார்.

ஆனால் ராஜபக்சவும் அவரது குடும்பத்தவர்கள் குழுவினர் அனைவரும் பண்டாரநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு தங்கள் ஆவணங்களை உறுதி செய்வதற்காக வந்தனர் என்பதை குடிவரவு துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பொதுமக்களிற்கான பகுதிக்கு செல்வதை தடுக்கின்றனர் என காவற்துறையினர் விமானநிலைய பாதுகாப்பு ஊழியர்களும் இந்த ஊடகத்திற்கு தெரிவித்தனர்.

9ம் திகதி முதல் மிக முக்கிய பிரமுகர்களிற்கான பகுதிகளில் பணியாற்றுவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மறுத்து விட்டனர் என எஸ்பிஎஸ் சிங்கள சேவைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன் பின்னர் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் எதிகாட் ஈவை267 விமானநிலையத்தில் ஏற முயன்றனர்,ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அதனை தவறவிட்டனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் ஏஎன்32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமானநிலையத்தில் இறங்குவதற்கு விடுத்த வேண்டுகோளை இந்தியா மறுத்துள்ளது என எங்கள் ஊடகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இரவில் தங்கியிருந்த ஜனாதிபதி எப்படி பாதுகாப்பாக வெளியேறுவது என ஆராய்ந்தனர் என பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவர் உறுதி செய்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments