கோணலாகிய கூட்டமைப்பின் கணிப்பு!நாணலாக அங்கலாய்ப்பு!

You are currently viewing கோணலாகிய கூட்டமைப்பின் கணிப்பு!நாணலாக அங்கலாய்ப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.

“என்னைப் பொறுத்தவரையில் ஒரு கூட்டு தீர்மானம் எடுத்தால் அதன் பொறுப்பு முழுமையாக தீர்மானம் எடுத்த அத்தனை பேரையும் சாரும்.

அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அந்த பொறுப்பை நான் தனியே சுமக்க நேரிட்டாலும் அதற்கும் நான் தயார். எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது.

எனினும் சில உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் போது ரணிலுக்கு வாக்களிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரனின் முகநூல் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதேவேளை

ஆளுக்கொரு திசையில் அதிகார மோகத்தில் பறக்கும் இவர்கள் ஒருபோதும் தமிழர்களின் விடுதலைக்கு உறுதியோடு செயற்படமாட்டார்கள் என்பதை இவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளும் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது இனியாவது இந்த நாணல்கள் விடயத்தல் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டுமென தமிழின உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments