கோண்டாவிலில் வன்முறைக் கும்பல் அடாவடி! – நான்கு பேர் படுகாயம்!!

You are currently viewing கோண்டாவிலில் வன்முறைக் கும்பல் அடாவடி! – நான்கு பேர் படுகாயம்!!

கோண்டாவில் இபோச சாலைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் நேற்றிரவு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீடொன்றுக்கும் தீவைக்கப்பட்டதாகவும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது. சம்பவத்தில் வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையில் படுகாயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

கோண்டாவிலில் வன்முறைக் கும்பல் அடாவடி! - நான்கு பேர் படுகாயம்!! 1
கோண்டாவிலில் வன்முறைக் கும்பல் அடாவடி! - நான்கு பேர் படுகாயம்!! 2
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments