கோப்பாயில் 5 போதைப் பொருள் வியாபாரிகள் கைது!

You are currently viewing கோப்பாயில் 5 போதைப் பொருள் வியாபாரிகள் கைது!

கோப்பாய் சிறீலங்கா காவற்துறை பிரிவில் போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகாதவர்கள் என்பதுடன் வியாபாரிகள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை கோப்பாய் சிறீலங்கா காவற்துறை நிலைய புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்தனர்.

கோப்பாய் செல்வபுரம் பகுதியில் 4 கிராம் 200 மில்லிக்கிராமுடம் அதே இடத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் ஊரெழு முருகன் கோவிலடியைச் சேர்ந்த நான்கு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 26 வயதுடைய ஒருவரிடம் 2 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின், மற்றொருவரிடம் 96 போதை மாத்திரைகள், ஏனைய இருவரும் 15 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஐவரும் தினமும் போதைப்பொருள் வியாபாரத்தினால் இலட்சம் ரூபாய் பணம் சம்பாதிப்பவர்கள். அவர் கோப்பாய் சிறீலங்கா காவற்துறை நிலைய புலனாய்வு பிரிவினரிடம் டீல் பேசி தம்மை விடுவிக்க முற்பட்டனர் என்று சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments