கோப்பாய் மாட்டிறைச்சிக் கடையில் கத்திக்குத்து!

You are currently viewing கோப்பாய் மாட்டிறைச்சிக் கடையில் கத்திக்குத்து!

தீபாவளி நாளில் மாட்டிறைச்சிக் கடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில் இறைச்சி வாங்கச் சென்றவர் படுகாயமடைந்துள்ளா நிலையில் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் மாட்டிறைச்சி வாங்கச் சென்ற கோப்பாயைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர்
இறைச்சி பசு மாடு போல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து மாட்டிறைச்சி வாங்கவந்தவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கானவர் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இறைச்சி வாங்க வந்தவர் மதுபோதையிலேயே தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் கத்தியால் குத்தியதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தையடுத்து மாட்டிறைச்சிக் கடைக்கு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள