சத்தியம் தவறியவர்களால் தமிழருக்கு சத்தியசோதனை!!

You are currently viewing சத்தியம் தவறியவர்களால் தமிழருக்கு சத்தியசோதனை!!

இன அழிப்பு அரசிற்கு வெள்ளையைடிக்க தமிழர்களை சிங்களதேசம் பகடை காய்களாக பயன்படுத்துகின்றது.

அவ்வகையில் ஈபிடிபி தரப்பை சேர்ந்த யோகேஸ்வரிக்கு நாற்காலி கொடுத்துள்ளார்தமிழினப்படுகொலையாளி கோத்தபாய.

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற காவல்துறை மா அதிபர் சந்திர பெர்ணாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமால் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த ஆணைக்குழுவில் இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பால்நிலை சமத்துவத்தை பிரதிபலிக்க வேண்டியதைக் கவனத்தில்கொண்டு யோகேஸ்வரி பற்குணராஜாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பு:
டக்கிளஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் சிறீலங்காவின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் இவர்களுக்கு யார் ஆணைக்குழுவைப்பது என்பதுதான் தமிழ்மக்களின் நெஞ்சக்கூட்டுக்குள் நெருஞ்சி முள்ளாக குத்தும் வலி

பகிர்ந்துகொள்ள