சந்தேகத்துக்கு இடமான இளைஞனிடம் கத்தி, ஓடிக்கொலோன் மீட்பு!

You are currently viewing சந்தேகத்துக்கு இடமான இளைஞனிடம் கத்தி, ஓடிக்கொலோன் மீட்பு!

யாழ்., அச்சுவேலியில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கோலன் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டு வளாகத்தைத் துப்பரவு செய்யும் பணியில் நேற்று முன்தினம் (24) ஈடுபட்ட குறித்த இளைஞன்,  வேலை முடிந்து சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயிருந்தமை தொடர்பில், அயலவர்களிடம் பெண் தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலை செய்து திரும்பிய இளைஞன் மீதே அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், இரவு மீண்டும் அந்த இளைஞன், மேற்படி வீட்டுக்கு வரும் போது, அயலவர்கள் மடக்கிப் பிடித்தனர்.

இளைஞனிடம் விசாரித்த போது , பெண் தனியே வீட்டில் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பாக இருக்கவே தான் வந்ததாகவும் கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

அதனை அடுத்து இளைஞனை, பரிசோதித்த போது அவரது உடைமையில் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கோலன் உள்ளிட்டவையை மீட்ட பிரதேசவாசிகள், அச்சுவேலி காவல் துறையிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.

சந்தேகத்துக்கு இடமான இளைஞனிடம் கத்தி, ஓடிக்கொலோன் மீட்பு! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments